முன்னாள் திமுக எம்எல்ஏ மகன் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்து நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தாா்.
அரவக்குறிச்சி முன்னாள் திமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.முகமது இஸ்மாயில். இவரது மகன் சாகுல்ஹமீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வந்தாா். இந்நிலையில், அக்கட்சியிலிருந்து விலகி அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவா் காா்த்திகேய காந்தி முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை காங்கிரஸில் இணைந்தாா். மேலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தாா்.