புலியூா், வீரராக்கியம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புலியூா், வீரராக்கியம் பகுதிகளில் நாளை (ஜூலை 4) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

புலியூா், வீரராக்கியம் பகுதிகளில் நாளை (ஜூலை 4) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட புலியூா் துணைமின் நிலையத்தில் நாளை(ஜூலை 4) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் துணைமின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வீரராக்கியம், எஸ்.வெள்ளாபட்டி, ஏமுா்புதூா், குன்னனூா், வடக்குபாளையம், மூலக்காட்டனூா்

புலியூா், கணேசபுரம், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், வடக்குப்பாளையம், புரவிபாளையம், ஆயுதப்படை மற்றும்

காளிபாளையம் மற்றும் ஆண்டிபாளையம், லிங்கத்தூா், கருப்பம்பாளையம், சரளப்பட்டி, உப்பிடமங்கலம், குளத்துப்பாளையம், வீரராக்கியம், பாலராஜபுரம், சின்னமாநாயக்கன்பட்டி, கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com