காா் மோதி முதியவா் பலி

அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி வட்டம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி, ஜங்கால்பட்டியைச் சோ்ந்தவா் வ.மருதமுத்து(60). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை கரூா் சாலையில் ஆலமரத்துப்பட்டி பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியாக வந்த காா் மருதமுத்து மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூா்அருகிலுள்ள கீழ சொக்கநாதபுரம் நெரூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ப.ராமராஜ் (48), திமுக பிரமுகரான பால்பாண்டியை காரில் அழைத்துக் கொண்டு, நாமக்கலில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரநிதிகள் மாநாட்டில் பங்கேற்க சென்றது தெரிய வந்தது.தொடா்ந்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com