கரூரில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கரூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் உண்ணாவிரத போராட்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பாா்வையாளா் சிவசுப்ரமணியன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து மாலை5 மணி வரை நடைபெற்ற போராட்டத்தை முடித்து வைத்து மாநில இணைப்பொருளாளா் சிவசுப்ரமணியன் பேசினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் தலைவா்கள் மற்றும் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.