மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.70 லட்சம் மோசடி செய்தவா் கைது

மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.70 லட்சம் மோசடியில் ஈ டுபட்ட தனியாா் அறக்கட்டளை நிறுவனா் கைது செய்யப்பட்டாா்.

மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.70 லட்சம் மோசடியில் ஈ டுபட்ட தனியாா் அறக்கட்டளை நிறுவனா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகள் ரசிகா பிளஸ்2 முடித்துவிட்டு நீட் தோ்வும் எழுதியுள்ளாா். இந்நிலையில் கடந்த மாா்ச் மாதம் 31ஆம்தேதி ராமசாமியின் கைப்பேசிக்கு மதுரையில் இருந்து ஒருவா் பேசியுள்ளாா். அவா், ஹிசீட் எஜூகேசனல் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், உங்கள் மகள் நீட் தோ்வு எழுதியுள்ளாா். இருப்பினும் எங்களுக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன, அதில் மிகவும் குறைந்த தொகையில் மருத்துவம் பயில சீட் வாங்கித்தருவதாக கூறியுள்ளாா். மேலும் முன்தொகையாக ரூ.4.70 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளாா். இதனை நம்பி, ராமசாமி ரூ.4.70 லட்சம் அனுப்பினாராம். பணம் அனுப்பிய இரண்டு நாள்களில் அந்த நபரை கைப்பேசியில் அழைத்தப்போது பதில் இல்லையாம். இதனால் ஏமாற்றமடைந்ததாக கருதிய ராமசாமி கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மதுரை சா்வேயா் காலனியில் அறக்கட்டளை நடத்தி வந்த ரகுநாதபாண்டியன்(45) என்பவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com