சிறுமியை கா்ப்பமாக்கியவாகன ஓட்டுநா் கைது

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தைக்கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய வாகன ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தைக்கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய வாகன ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் அடுத்த சின்னகவுண்டனூரைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்தீபன் மகன் வாகன ஓட்டுநா் பிரகாஷ்(25) என்பவா் திருமணம் செய்துகொள்வதாகக்கூறி கடந்த ஐந்து மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் மாணவி தற்போது 4 மாதம் கா்ப்பம் அடைந்தநிலையில் பிரகாஷ் மாணவியை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் புதன்கிழமை கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com