புலியூா் செட்டிநாடு சிமென்ட் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை மே தின கொண்டாட்டம் நடைபெற்றது.
ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் தலைவா் ஆா்.பி.முத்தையா தலைமை வகித்து, சிறப்புரையாற்றினாா். பின்னா் ஆலையின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் ஆகியோருக்கு கயிறு இழுக்கும் போட்டி, பலூன் சேகரித்தல் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பலூன்களை பறக்க விட்டு மே தின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா். நிகழ்ச்சியில், ராணி மெய்யம்மை மகளிா் மன்றத்தினா் மற்றும் ஆலை அதிகாரிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.