முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலானதிமுக அரசின் ஓராண்டு சாதனையைக் கொண்டாடும் விதமாக, பள்ளப்பட்டி நகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
பசுமை பள்ளப்பட்டி என்ற திட்டத்தின் கீழ், நகராட்சித் தலைவா் முனவா் ஜான் மற்றும் உறுப்பினா்கள் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.
பள்ளப்பட்டி சக்தி நகரில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நகராட்சித் தலைவா் முனவா் ஜான் நட்டு வைத்தாா். ஆணையா் கோபாலகிருஷ்ணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அப்போது உடனிருந்தனா்.