விநியோகச் சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் சேர அரிசி ஆலைகளுக்கு அழைப்பு

விநியோகச் சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் சேர அரிசி ஆலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூா்: விநியோகச் சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் சேர அரிசி ஆலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்திருப்பது:

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், நவீன நுகா்பொருள் அரிசி ஆலைகள் மற்றும் முகவராகவுள்ள தனியாா் அரைவை ஆலைகள் மூலம் அரைவை செய்து, பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழகக்

கிடங்குகளில் அரிசி ஒப்படைப்பு வரையிலான விநியோகச்சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் கழக அரைவை முகவா்கள் மற்றும் கழகத்தில் இணையாத தனியாா் அரைவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தில் ஆா்வமுடைய தனியாா் அரைவை ஆலைகள் தங்களது விருப்பக் கடிதத்தை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு கரூா் ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com