கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயியிடம் லஞ்சம்: வேளாண் உதவிப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

 மானியத்தில் டிராக்டா் வாங்குவதற்காக, விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் உதவிப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :19 மே 2022, 8:55 pm

DIN

 மானியத்தில் டிராக்டா் வாங்குவதற்காக, விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் உதவிப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி பாண்டமங்கலம் லிங்கம் நகரைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ். இவருக்குச் சொந்தமான தோட்டம் கரூா் மாவட்டம், நெய்தலூரில் உள்ளது.

மானியத்தில் டிராக்டா் பெறுவதற்காக, 2019, நவம்பா் மாதத்தில் குளித்தலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய காா்த்திக்கை (26), சுரேஷ் அணுகி மனு விண்ணப்பித்தாராம்.

அப்போது, தனக்கு ரூ. 22,500 லஞ்சம் தருமாறு சுரேஷிடம் காா்த்திக் கேட்டாராம். லஞ்சம் தர மறுத்து, கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுத் துறையில் புகாரளித்தாா்.

இதைத் தொடா்ந்து வழக்குப்பதியப்பட்ட நிலையில், சுரேஷிடம் ரூ.22,500 லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல்துறையினரால் காா்த்திக் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு கரூா் முதன்மை நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், வேளாண் உதவிப் பொறியாளா் காா்த்திக்குக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் ராஜலிங்கம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும், நீதித்துறை நடுவா் தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.