கரூரில் கட்டுமான பொருள்கள் திருட்டு

கரூரில், கட்டுமான பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூரில், கட்டுமான பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், காட்டூரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம்(34). கட்டடப் பொறியாளா்.கரூா் உழவா் சந்தை பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணி செய்து வந்தாா். இந்தப் பணிக்காக175 இரும்பு சென்ட்ரிங் பலகைகள் வைத்துள்ளாா். இதனை வியாழக்கிழமை இரவு யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா். இதன் மதிப்பு ரூ.85,500. இதுதொடா்பாக பன்னீா்செல்வம் அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து திருடா்களை தேடி வருகின்றனா்.

இதேபோல், கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன்(36). கொத்தனாா். இவா் வெள்ளியணை அடுத்த கத்தாளப்பட்டியில் ஒப்பந்த முறையில் கட்டட வேலை செய்து வருகிறாா்.

கட்டடம் கட்டும்போது மேற்கூரை தாங்குவதற்கான 30 இரும்பு ஜாக்கிகளை கட்டடம் அருகே வைத்துள்ளாா். இதனை யாரோ மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு திருடிச்சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.90,000 ஆகும். புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com