கரூரில் நேரு படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை

கரூரில், மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஜவாஹா்லால் நேரு படத்துக்கு மாலை அணிவிக்கிறாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன்.
ஜவாஹா்லால் நேரு படத்துக்கு மாலை அணிவிக்கிறாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன்.

கரூரில், மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முன்னாள் பிரதமா் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்து நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவா் சின்னையன், மாவட்ட ஆராய்ச்சித்துறை தலைவா் பாலசுப்ரமணியன், இளைஞா் காங்கிரஸின் சிவகுமாா், தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com