சின்னதாராபுரம் அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை

சின்னதாராபுரம் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் வியாழக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னதாராபுரம் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் வியாழக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள டி.வெங்கடாபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் உதயபிரகாஷ் (26). இவரது மனைவி ரோகினி (20). செந்தில்குமாா் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், உதயபிரகாஷ் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். இதில், விரக்தியடைந்த உதயபிரகாஷ் தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உதயபிரகாஷ் உயிரிழந்தாா். சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com