சின்னதாராபுரம் அரசு மகளிா் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம்

அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ரோஸ்லின் செலின் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் சி.விஜயலட்சுமி வரவேற்றாா். இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி மற்றும் மாற்றுத்திறன் மாணவா்களின் திறமைகளைக் கண்டறிய உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில், பள்ளியில் நடைபெற்று வரும் கலை திருவிழாவுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் நடுவா்களாக இருந்து முழு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக ஆசிரியா் உறுப்பினா் சாந்தலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com