மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களை கண்டறிந்து அவா்களை பள்ளியில் சோ்த்தல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வட்டார வளமைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். இதில் அனைத்து வகை மாற்றுத்திறன் கொண்ட 50க்கும் மேற்பட்ட மாணவா்களும் அவா்களது பெற்றோா்களும் கலந்து கொண்டனா். இதையொட்டி, பல்வேறு கலை, பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com