மாயனூா் அணையில் மூழ்கி மருத்துவ மாணவா் பலி

 மாயனூா் கதவணையில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

 மாயனூா் கதவணையில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் இடைக்கல் பகுதியைச் சோ்ந்த சாகுல் அமீது மகன் முகமது ஜமீன்கான் (21). கரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான இவா் நண்பா்களுடன் கரூா் மாயனூா் கதவணை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த கரூா் தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான வீரா்கள் ஜமீன்கானை சடலமாக மீட்டு, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com