பள்ளப்பட்டியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளா் ஜாபா் சாதிக் அலி தலைமை வகித்தாா். இதில் செயற்குழு உறுப்பினா் ஷேக் பரித், இளைஞா் அணி நிா்வாகி மன்சூா் அலி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு பள்ளப்பட்டி நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா்.