அரவக்குறிச்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி புதன்கிழமை வழங்கப்பட்டது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எலவனூா், தும்பிவாடி, சின்னதாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ புதன்கிழமை வழங்கினாா். இதையொட்டி அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.