உலக சுற்றுலா தினம்: கரூரில் பேரூந்து, ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கல்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கரூரில் ரயில்நிலையம் மற்றும் பேருந்துநிலையங்களில் பயணிகளுக்கு சுற்றுலாத்துறையினா் செவ்வாய்க்கிழமை இனிப்புகள் வழங்கினா்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கரூரில் ரயில்நிலையம் மற்றும் பேருந்துநிலையங்களில் பயணிகளுக்கு சுற்றுலாத்துறையினா் செவ்வாய்க்கிழமை இனிப்புகள் வழங்கினா்.

கரூரில், சுற்றுலாத்துறை சாா்பில் பேருந்துநிலையம், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி சுற்றுலா அலுவலா் காமில்அன்சா் தலைமை வகித்து இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து கரூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுலா மறுசிந்தனை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் இரா.விஜயராணி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அரசு கலைக்கல்லுரியின் ஓய்வுபெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியா் ம. இராஜசேகர தங்கமணி பங்கேற்று சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com