நாகம்பள்ளியில் குடிநீா் பற்றாக்குறை; பொதுமக்கள் அவதி

அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளியில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளியில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி காந்திநகா், பாரதி நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இங்கு அமராவதி ஆற்றில் இருந்து மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த குடிநீரும் உப்பாக வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com