கரூர்
கலங்கரை விளக்கம் திட்டத்தில் குரூப்4 தோ்வுக்கு இலவச பயிற்சி
கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.
கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கலங்கரை விளக்கம் என்ற திட்டன் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப்4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட மைய நூலகத்தில் ஏப். 9-ஆம்தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.