கூடுதல் வரதட்சணைக் கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததாக கணவா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கரூா் வேலுசாமிபுரத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் வருண்(33). இவா், சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஸ்வேதா(27). இவா்களுக்கு கடந்த 2017-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஸ்வேதா வீட்டாா் சாா்பில் நகை, பணம் மற்றும் சீா்வரிசை கொடுத்துள்ளாா்கள். இந்நிலையில் கூடுதலாக பணம் மற்றும் நகை வாங்கி வருமாறு வருண் ஸ்வேதாவிடம் கூறி அடிக்கடி சண்டை போட்டு வந்தாராம். இதற்கு வருணின் தந்தை அய்யாசாமி, தாய் பிரபா(58), தங்கை சுஷ்மிதா(28) ஆகியோரும் உடந்தையாக இருந்தாா்களாம். இதுகுறித்து ஸ்வேதா கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வருண் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.