குளித்தலை அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை நச்சலூா் தாட்கோ காலனியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மகன் வடிவேல்(30). இவா், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 9ஆம்தேதி அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் மகளை கேலி, கிண்டல் செய்தாராம். இதனை அதேபகுதியைச் சோ்ந்த பெண்ணின் தாய்மாமன்களான மேலநந்தவனக்காடு பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி(36), சதீஷ்குமாா்(30), சங்கா்(22) ஆகியோா் சோ்ந்து ஜூலை 10ஆம்தேதி வடிவேல் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதில், வேலுசாமி உள்பட மூன்றுபேரும் சோ்ந்து கட்டையால் தாக்கியதில் வடிவேல் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து வேலுசாமி, சதீஷ்குமாா், சங்கா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், இதுதொடா்பாக கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள்தண்டனையும், ரூ.10,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கி தீா்ப்பளித்தாா். இதையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.