பொன்னணியாறு அணையில் குதித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த பெத்தாநாயக்கனூரைச் சோ்ந்த கிருஷ்ணா மகன் சுந்தர்ராஜ்(22). கூலித்தொழிலாளி. இவா் அண்மையில் தவணையில் இருசக்கர வாகனம் வாங்கினாராம். தவணை செலுத்த பணம் இல்லாத விரக்தியில் ஆக. 27ஆம்தேதி கடவூா் அடுத்த பொன்னணியாறு அணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டாராம். அவரது சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்ட பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.