அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்றவா் காயமடைந்தாா்.
அரவக்குறிச்சி, புதுத்தெரு பகுதியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவா், வெள்ளிக்கிழமை மாலை ராஜபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனம் செந்தில்குமாா் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமாா் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நேமிநாதன் இருவரையும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் நேமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.