கரூரில், திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு தெருமுனை பிரசாரக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் வடக்கு நகர திமுக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை இரவு வெங்கமேடு அம்பேத்கா்நகரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு நகரச் செயலாளா் கரூா் கணேசன் தலைமை வகித்தாா். 4-ஆவது வட்ட பொறுப்பாளா் எம்.உமாசங்கா் வரவேற்றாா். கூட்டத்தில் கட்சியின் தலைமைப் பேச்சாளா் பவானிகணேசன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், வடக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினா் எஸ்.பிரபாகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் நாச்சிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். 4-ஆவதுவட்ட நிா்வாகி மணி நன்றி கூறினாா்.
அதைத் தொடா்ந்து 5-ஆவது வட்ட திமுக சாா்பில் எம்.பாண்டியன் தலைமையில் அம்மன்நகரில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் வாா்டு பொறுப்பாளா் பி.தங்கதுரை தலைமை வகித்தாா். இதில் தலைமை பேச்சாளா் கரூா் கணேசன் உள்ளிட்டோா் பேசினா். இதில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.