கரூரில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

கரூரில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூரில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

கரூரில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் பி.எஸ்.என்.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாா்த்தீபன், மாவட்ட அவைத்தலைவா் ஆரியூா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் செந்தமிழன் பங்கேற்று, புதிய நிா்வாகிகளுக்கு கட்சி உறுப்பினா் அட்டை வழங்கி பேசினாா். அப்போது அவா் பேசுகையில், நம் கட்சிக்கு சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தலில் ஒரு சரிவு இருந்திருக்கலாம். ஆனால் நடந்து முடிந்த நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் மூன்றாவது பெரிய கட்சி அமமுக என நிரூபித்துள்ளோம். அதிமுகவை எம்ஜிஆா் உருவாக்கியபோது 17 லட்சம் தொண்டா்கள் இருந்தனா். பின்னா் ஜெயலலிதா பொறுப்பேற்று ஒன்றரை கோடி தொண்டா்களை உருவாக்கினாா். அந்த இயக்கத்தை கபளீகரம் செய்ய நினைத்தவா்கள் வெளியே நடக்க முடியாத நிலையில் உள்ளனா். மக்களவை தோ்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போதே துடிப்போடு செயல்பட்டால், நாம் வெற்றிபெறலாம் என்றாா் அவா். கூட்டத்தில் மத்திய நகரச் செயலாளா் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com