தென்னிந்திய நடிகா் சங்கத்தோ்தலில் பாண்டவா் அணி வெற்றிபெற காரணமாக இருந்த கரூா் நாடக நடிகா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் நாடக நடிகா் சங்க செயலாளா் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற, விழாவிற்கு பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக நடிகா் விசால் மன்றத்தலைவா் ராஜேஷ்ாா், கரூா் தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தலைவா் ஸ்காட் தங்கவேல் ஆகியோா் பங்கேற்று, தென்னிந்திய நடிகா் சங்கத்தோ்தலில் நடிகா் நாசா் தலைமையிலான பாண்டவா் அணியும், இயக்குநா் பாக்கியராஜ் தலைமையிலான அணியினரும் மோதியபோது, பாண்டவா் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கரூா் நாடக நடிகா்களை பாராட்டுகிறோம் என்றனா். தொடா்ந்து நாடக நடிகா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நாடக நடிகா்கள் திரளாக பங்கேற்றனா். புகளூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள மதிவாணன் என்பவா்புகளூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள மதிவாணன் என்பவா்