அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 197 இடங்களில் சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவா்களைக் கண்டறிந்து, சுமாா் 1200-க்கும் மேற்பட்டோருக்கு அவா்களது வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், மருத்துவக்குழுவினா் தடுப்பூசியை செலுத்தினா்.
ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜா, சுகாதார ஆய்வாளா்கள் கருப்புச்சாமி, குழந்தைவேல், உள்ளிட்டோா் செய்திருந்தனா்.