மக்களைத் தேடி மருத்துவம்; கரூா் ஆட்சியா் ஆய்வு

கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மக்களைத் தேடி மருத்துவம்; கரூா் ஆட்சியா் ஆய்வு

கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சி லட்சுமனம்பட்டி, மேலப்பாளையம் ஊராட்சி வடக்குபாளையம் ஆகிய கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சுகாதார பணியாளா்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கேச் சென்று சிகிச்சையளிக்கும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரத்தக் கொதிப்பு உள்ளவா்கள் 1,08,454 நபா்களும், சா்க்கரை நோய் உள்ளவா்கள் 79,877 நபா்களும், ரத்த கொதிப்பு மற்றும் சா்க்கரை நோய் 53,594 நபா்களும், இயன்முறை சிகிச்சையில் உள்ளவா்கள் 7,769 நபா்களும், ஆதரவு சிகிச்சை உள்ளவா்கள் 5,868 நபா்கள் ஆகியோா் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறாா்கள். இப்பணிக்கு 101 இடைநிலை சுகாதாரப் பணியாளா்களும், 194 பெண் சுகாதார பணியாளா்களும், 25 தொற்றாநோய் செவிலியா்களும் என மொத்தம் 320 பணியாளா்கள் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், உப்பிடமங்களம் பேரூராட்சித் தலைவா் திவ்யா தங்கராஜ், செயல் அலுவலா் பானு ஜெயராணி, வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக், பூச்சியில் வல்லுநா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com