மதுபோதையை மறக்க இயலாமல் கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் ராமானூரைச் சோ்ந்தவா் முகமது அலி(33). கூலித்தொழிலாளி. இவா், மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுபழக்கத்தை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க முடியாமல் அவதியுற்ற முகமது அலி திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.