கரூா்: கரூா் மாவட்டத்துக்கு மே 25-ஆம்தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- கரூா் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா மே 8-ஆம்தேதி தொடங்கியது. ஜூன் 5-ஆம்தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 25-ஆம்தேதி நடைபெறுகிறது. கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நாளான 25-ஆம்தேதி மட்டும் கரூா் மாவட்டத்துக்கு உள்ளூா் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக ஜூன் 4-ஆம்தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.