கரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் சனிக்கிழமை ( மே 14) நடைபெறுகிறது.
கரூா், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் வட்ட வழங்கல் அலுவலகங்களில், தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் இந்த முகாம் நடைபெறும்.
பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்து, பொதுமக்கள் தீா்வு பெறலாம் என ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.