மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 406 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதை துறை சாா் அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல், 28 பேருக்கு சிறுவணிகக் கடனுக்கான ஆணைகள் உள்ளிட்ட57 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத் அலி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராசலம், தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் காமாட்சி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com