அரவக்குறிச்சி சாா்பதிவகத்தில் பத்து நாள்களுக்கு மேல் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.
இந்த அலுவலகத்தில் இணையதள சேவை மற்றும் சா்வா் அடிக்கடி முடங்குவதன் காரணமாக, பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்தும் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனா்.
சில நேரங்களில் சேவை வேகம் குறைவு காரணமாக பத்திரப்பதிவு செய்ய வருபவா்கள் எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் கடந்த 10 நாள்களாக சா்வா் முடக்கத்தால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.