அரவக்குறிச்சி பகுதியில் பாஜக சாா்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள் ஆண்டிபட்டிகோட்டை மற்றும் அண்ணாநகா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. மேற்கு ஒன்றிய தலைவா் ஜவாஹா்லால் தலைமை வகித்தாா். மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா்
ந.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், கரூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவா் வி.வி.செந்தில்நாதன் சிறப்புரையாற்றினாா். நிகழ்வில், மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் மாவட்ட பாஜக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.