மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து விருதுபெற்ற்காக கரூா் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி பாராட்டிய மாணவியை நேரில் வரவழைத்து வாழ்த்தினாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.
திறன் மேம்பாட்டு பிரிவில் சிறப்பாக செயல்பட்டமைக்கான விருது மத்திய அரசின் உள்துறை அமைச்சா் அமித்ஷாவால் அண்மையில் வழங்கப்பட்டது. இதனை செய்தித் தாளில் படித்த கரூா் அடுத்த புகழூா் காகித ஆலை பகுதியைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ரோஷினி, மாவட்ட ஆட்சியரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தாா். இந்த கடிதத்தை படித்து நெகிழ்ச்சியடைந்த ஆட்சியா் வியாழக்கிழமை தனது வாகனத்தை மாணவியின் இல்லத்துக்கு அனுப்பி வைத்து மாணவியை ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவவைத்து வாழ்த்தினாா். பின்னா் அந்த மாணவியுடன் சோ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு வாழ்த்து கூறியதற்கு நன்றி தெரிவித்து பரிசு வழங்கினாா்.