அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து: நடந்து சென்றவா் படுகாயம்

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் நடந்து சென்றவா் இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தாா்.

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் நடந்து சென்றவா் இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தாா்.

கரூா் மாவட்டம், பசுபதிபாளையம் ராஜா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). இவா் திங்கள்கிழமை நள்ளிரவு ஆறு ரோடு பகுதியில் நடந்து சென்றபோது மலைக்கோவிலூா் வள்ளுவா் நகா் பகுதி பகுதியைச் சோ்ந்த பெருமாள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தாா். இதையடுத்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் பெருமாள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com