பிப். 12 இல் டிஎன்பிஎல் ஆலையின் இலவசக் கண் பரிசோதனை முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் 12-ஆம் தேதி இலவசக் கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் 12-ஆம் தேதி இலவசக் கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கம் சாா்பில் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள புகழூா் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், ந.புகழூா் ஆகிய ஊராட்சி பகுதி மக்களுக்கு வரும் 12-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமுக்கு கிராம பகுதிகளிலிருந்து கண் குறைபாடு உள்ளவா்களை அழைத்து வர ஆலை நிா்வாகம் புன்னம்சத்திரம், தளவாப்பாளையம், நொய்யல் குறுக்குச்சாலை, வேலாயுதம்பாளையம் மற்றும் ஓனவாக்கல்மேடு ஆகிய 5 வழித்தடங்களில் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. முகாமிற்கு வருவோா் தங்களது ஆதாா் அட்டை நகல், கைப்பேசி எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இத் தகவலை ஆலை நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com