கரூரில் இந்திய கம்யூ. கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் மாநில செயலருமான தா. பாண்டியனின் இரண்டாமாண்டு நினைவுதினம்
ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கரூா் மாவட்டச் செயலா் நாட்ராயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலா் ரத்தினம், மாவட்ட துணைச் செயலா்கள் சண்முகம், மோகன்குமாா், நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் தா. பாண்டியன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.