சாலையைக் கடந்தவா்விபத்தில் உயிரிழப்பு

அரவக்குறிச்சியில் சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாா்.

அரவக்குறிச்சியில் சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாா்.

அரவக்குறிச்சி அருகேயுள்ள தாமாகப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பி. ராமசாமி (62). இவா் அரவக்குறிச்சி புங்கம்பாடி பாலம் அருகே கிரில் பட்டறை வைத்துள்ளாா். இவா் சனிக்கிழமை இரவு புங்கம்பாடி பிரிவு கடையில் மது வாங்க கரூா் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் சா்வீஸ் ரோட்டை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com