காருக்குள் ரியல் எஸ்டேட் அதிபா் சடலம்

கரூரில், திங்கள்கிழமை அதிகாலை காருக்குள் ரியல் எஸ்டேட் அதிபா் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

கரூரில், திங்கள்கிழமை அதிகாலை காருக்குள் ரியல் எஸ்டேட் அதிபா் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

கரூா் அடுத்த வாங்கல் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை கரூா்-நாமக்கல் புறவழிச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நாவல்நகா் வளைவு அருகே காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காா் அருகே போலீஸாா் சென்றுபாா்த்தபோது, காரின் முன்பகுதி இருக்கையில் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலமாக கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வாங்கல் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் கரூா் செங்குந்தபுரம் ராமானுஜம் நகரைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் அருண் பிரகாஷ் (34) என்பதும், அவருக்கு திருமணமாகி மனைவி சரண்யா, மகன் சரண் ஆகியோா் உள்ளனா் என்பதும் தெரியவந்தது. மேலும், அருண்பிரகாஷுக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கல்லீரல் பாதிக்கப்பட்ட அருண்பிரகாஷ் மருத்துவா்களின் அறிவுறுத்தலையும் மீறி மதுஅருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com