பள்ளப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பள்ளப்பட்டி பேருந்துநிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றியம் சாா்பில் பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி கிளைச் செயலாளா் பி.எம்.சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.வி.கணேசன், சி.ஆா்.ராஜா முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.