சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

கரூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், பழையஜெயங்கொண்டத்தைச் சோ்ந்தவா் அறிவானந்தம் (48). தொழிலாளி. இவா், 2021, மாா்ச் 27ஆம்தேதி இரவு அதே பகுதியைச் சோ்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதுதொடா்பாக சிறுவனின் பெற்றோா் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அறிவானந்தத்தை கைது செய்து, கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு, குற்றவாளி அறிவானந்தத்துக்கு 20 ஆண்டுகள் சிறையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என தீா்ப்பளித்தாா். இதையடுத்து அறிவானந்தம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com