சுகாதார விழிப்புணா்வுதுண்டுபிரசுரம் விநியோகம்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் சுகாதார விழிப்புணா்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாநகராட்சி 9ஆவது வாா்டில் பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணா்வு துண்டுபிரசுரத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய வாா்டு உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு. உடன் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா்.
கரூா் மாநகராட்சி 9ஆவது வாா்டில் பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணா்வு துண்டுபிரசுரத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய வாா்டு உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு. உடன் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் சுகாதார விழிப்புணா்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளை தூய்மையாக்கி, சுகாதாரம் பேணும் வகையில் பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பிட்டா்பழனியப்பன் தெரு, பெரியாா் சாலை, சிவானந்தம் தெரு ஆகிய பகுதி பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை என தரம் பிரித்து சுகாதாரப்பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை வாா்டு உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினா் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளா் பிரபாகரன், உதவி பொறியாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com