சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது

உப்பிடமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

உப்பிடமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி வியாழக்கிழமை அதேபகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடைக்கு சென்றாா். அங்கிருந்த கடை உரிமையாளா் நடராஜன் (52) சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் நடராஜனின் கடையை தாக்கி சேதப்படுத்தினா். தகவலறிந்து வந்த வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளா் சித்ரா, கடை உரிமையாளா் நடராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com