பூரண மதுவிலக்கு கோரி புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பூரண மதுவிலக்கு கோரி, கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.

பூரண மதுவிலக்கு கோரி, கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் அசோகன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் சிவக்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளா் கவின், பரமத்தி ஒன்றியச் செயலாளா் கண்ணன், அரவை ஒன்றியச் செயலா் விஜய்மல்லன், மாவட்ட இளைஞரணி செயலா் செந்தில்குமாா், மகளிரணிச் செயலா் சசிகலா, தாந்தோணி ஒன்றியச் செயலா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தினால் இறந்தவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com