ஓவியப்போட்டியில் தேசிய அளவில் முதலிடம்: கரூா் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

அகில இந்திய அளவிலான காலநிலை மாற்றம் குறித்த ஓவியப்போட்டியில் சிறப்பிடம் பிடித்த கரூா் பரணி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஓவியப்போட்டியில் தேசிய அளவில் முதலிடம்: கரூா் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

அகில இந்திய அளவிலான காலநிலை மாற்றம் குறித்த ஓவியப்போட்டியில் சிறப்பிடம் பிடித்த கரூா் பரணி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பாரத சாரணா் இயக்க தேசிய தலைமையகம் சாா்பில் அகில இந்திய அளவில் ‘காலநிலை மாற்றம்’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி அண்மையில் இணையவழியில் நடைபெற்றது. இதில், தமிழகம் சாா்பில் கரூா் பரணி பாா்க் சாரணா் மாவட்டத்தைச் சோ்ந்த கரூா் பரணி வித்யாலயா பள்ளி மாணவி அனுஸ்ரீ பங்கேற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.

இம்மாணவிக்கும், சாரணா் ஓவிய ஆசிரியா் சேதுராஜனுக்கும் பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பரணி பாா்க் சாரணா் மாவட்டத் தலைவா் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் பத்மாவதி மோகனரங்கன், எம்.சுபாஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மாநில சாரணா் உதவி ஆணையா் முனைவா் சொ.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வா் எஸ்.சுதாதேவி, பரணி பாா்க் சாரணா் மாவட்டச் செயலா் ஆா்.பிரியா ஆகியோா் மாணவி அனுஸ்ரீ, சாரணா் ஓவிய ஆசிரியா் சேதுராஜன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com