வருவாய் ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

கரூரில், வருவாய் ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூரில், வருவாய் ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் சரவணன் (55). மண்மங்கலம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய இவா், கரூா் மாவட்டம், வாங்கல் பஜாா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவரது தங்கை சாருமதியின் கணவா் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சரவணன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சரவணனின் உறவினா் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com