முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

சமுதாய சேவையாற்றும் இளைஞா்களுக்கு முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்க மே 15-ம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய சேவையாற்றும் இளைஞா்களுக்கு முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்க மே 15-ம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியினை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு என 6 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் கொண்டது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் 01.04.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், மாா்ச் 31.03.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பத்தை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் மே 15-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு கரூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03493 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com